Friday, March 22, 2019

வெண்பூசணி அல்வா



தேவையான பொருட்கள் 

  • பூசணிக்காய் - 3 கீற்று 
  • சர்க்கரை - 100 கிராம் 
  • அரிசி - 1/2 கப் 
  • நெய் - 100 கிராம் 
  • ஏலக்காய்த் தூள் - 1 ஸ்பூன் 
  • கோவா - 50 கிராம் 
  • ரோஸ் எஸென்ஸ் - 1/2 ஸ்பூன் 
செய்முறை

  1. பூசணிக்காயை தோல், விதை நீக்கி துண்டுகளாக்கி மிஸ்யில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  2. அதை வடிகட்டி நீர் வேறாகவும்  விழுது வேறாகவும் பிரிக்கவும். 
  3. சர்க்கரையை கனமான பாத்திரத்தில் பூசணிக்காய் நீரோடு சேர்த்து கிளறவும்.
  4. அரைக் கப் அரிசியை கழுவி சிறிது ஊற வைத்து மிஸ்யில் பால் விட்டு கெட்டியாக அரைக்கவும். 
  5. பூசணி விழுது, அரிசி மாவு, ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து பிசையவும்.
  6. சர்க்கரை ஓற்றைக் கம்பி பாகு வந்ததும் இந்தக் கலவையைச் சேர்த்து கைவிடாமல் சுருண்டு வரும்வரை கிளறவும். 
  7. பாலில் சிறிது கேசரிப் பவுடர், ரோஸ் எஸென்ஸ் சேர்த்து இதில் கலந்து , கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டிச் சிறிது ஆறியதும் துண்டு போடவும். 
  8. நெய்யில் பொரித்த முந்திரியும் திராட்சையும் சேர்க்கவும். 

சுவையான வெண் பூசணி அல்வா  ரெடி.

No comments:

Post a Comment