Tuesday, July 5, 2011

வெண் பொங்கல்





தேவையான பொருட்கள்
  • பச்சை அரிசி - 3/4 கப்
  • பாசிப்பருப்பு  - 1/4 கப்
  • தண்ணீர் - 4 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • நெய்  - 1/2 டீஸ்பூன்
  • மிளகு  - 2 டீஸ்பூன்
  • முந்திரி  - 15
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • இஞ்சி - 1/2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 1
  • கருவேப்பிலை - சிறிதளவு
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை
  1. முதலில் அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  2. வறுத்த பாசிப்பருப்பும், அரிசி, தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
  3. பின்னர், அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய், கடுகு, சீரகம், மிளகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், கருவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். 
  4. இதனுடன், வேக வைத்த சாதத்தை சேர்த்து தண்ணீர், உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து நெய் விட்டு வறத்த முந்திரியை இதில் போட்டு கிளறி விடவேண்டும்.
  5. ருசியான வெண்பொங்கல் தயார்.இதன் மேல் கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.
வெண்பொங்கலுக்கு தேங்காய் சட்னி,  சாம்பார் சுவையாக இருக்கும். 



No comments:

Post a Comment