Tuesday, March 19, 2019

பாலக்கீரை மசியல்


தேவையான பொருட்கள் 
   பாலக்கீரை - 1 கட்டு 
   சின்ன வெங்காயம் - 10 
   தக்காளி - 3 
   மஞ்சள் தூள் - 1சிட்டிகை 
   தூள் உப்பு - தேவைக்கேற்ப 
   சாம்பார் பொடி  - 1 ஸ்பூன் 
  தாளிக்க : 
  எண்ணெய் 
  கடுகு 
  சீரகம் 
  பெருங்காயம் 

செய்முறை 
  1. முதலில்  பாலக்கீரையை  தண்டுகள் நீக்கி இலைகளை மட்டும் தனியாக பிரித்து எடுத்து கொள்ள வேண்டும் .
  2. பிறகு குக்கர் ஒன்றில் பாலக்கீரையை மிதமான தீயில் 15 நிமிடம் வேக விடவும். 
  3. வெந்த கீரையை நன்கு மசித்து கொள்ள வேண்டும் .
  4. வாணலியில் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் மற்றும் பெருங்காயம்  சேர்த்து பொரிய விடவும்.
  5. அதனுடன் சின்ன வெங்காயம், அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. பிறகு  உப்பு , சாம்பார் பொடி , மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 
  7. அத்துடன் மசித்த பாலக்கீரையை சேர்த்து நன்கு வதக்கி,  கொதிக்க விடவும்.
சுவையான பாலக்கீரை மசியல் தயார். 
பயன்கள் 
  • இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றல் இதற்குண்டு. 
  • இரத்த சோகையுள்ளவர்கள், இதனை உட்கொள்வதால் சரிசெய்யமுடியும்.
  • இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது
  • பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.
  • பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதிகளவில் உள்ளது. 
  • பாலக்கீரை புற்றுநோயைத் தடுக்கும். 
  • குளிர்ச்சித்தன்மை கொண்டது.

No comments:

Post a Comment