Thursday, March 28, 2019

ஜவ்வரிசி வடகம்





தேவையான பொருட்கள் 
  • ஜவ்வரிசி - 1/2 கிலோ 
  • பச்சைமிளகாய் - 15 (தேவையான அளவு )
  • பூண்டு - 5 பல்
  • பெருங்காயம் - 1 சிட்டிகை  
  • உப்பு - தேவையான அளவு 
  • எலுமிச்சை பழம் - 1 
செய்முறை 
  1. முதலில் ஜவ்வரிசியை இரவு முழுவதும்  ஊற வைக்கவேண்டும் .




2 . மறு நாள் காலையில் குக்கர் ஒன்றில்  1 1/2 லிட்டர்  தண்ணீர்  ஊற்றி  7 முதல் 8 விசில்  வரும் வரை வைக்க வேண்டும் . 

3. மிஸ்யில் பச்சை மிளகாய் , பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும் .





4. பிரஷர் அடங்கியதும் அரைத்த விழுதினை ஜவ்வரிசியடன் சூட்டோடு சேர்த்து நன்கு கிளற வேண்டும். 
5 .பிறகு ஜவ்வரிசி ஆறியவுடன் மிஸ்யில் தண்ணீர் விடாமல்  கூழ்  போல அரைத்து கொள்ளவும். 
6. அதன்பிறகு  இறுதியாக எலுமிச்சை பழம் ஒன்றை அதனுடன் பிழிந்து  நன்றாக கலந்து கொள்ளவும்.
7. பிளாஸ்டிக் கவர் ஒன்றில்  மேலே  வீடியோவில் உள்ளது போன்று  சிறிய ஸ்பூன் ஒன்றில் வடகமாக இட்டு வெயிலில் நன்கு காய விடவும் .  

8. ஸ்பூன்னை தண்ணீரில் நனைத்து கொண்டால் ஒட்டாமல்  வடகம் தேய்க்க வரும். 












No comments:

Post a Comment