Thursday, July 7, 2011

ராஜ்மா கிரேவி


தேவையான பொருட்கள் 
  • வெங்காயம் - 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
  • தக்காளி - 3 (அரைத்தது)
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • மல்லி தூள் - 1 டீஸ்பூன்
  • சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  • பிரியாணி இலை - 1
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

  1. முதலில் காராமணியை வேகவைத்து கொள்ள வேண்டும் .
  2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்துஅதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  3. பின்பு அரைத்த வெங்காயம்இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
  4. பிறகு மிளகாய் தூள்கரம் மசாலாசீரகப் பொடிமல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறிபின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றிதேவையான அளவு உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
  5. பின்னர் வேக வைத்துள்ள காராமணியை லேசாக மசித்துவாணலியில் ஊற்றிசற்று கெட்டியான கிரேவி போன்று வரும் போது இறக்கி வைக்க வேண்டும். 

No comments:

Post a Comment