Thursday, January 27, 2011

கேசரி

தேவையானபொருட்கள்
  • ரவை -100 கிராம் (ஒரு பங்கு)
  • சர்க்கரை - 100 கிராம் (ஒரு பங்கு)
  • தண்ணீர் - முன்று பங்கு 
  • முந்திரி -  தேவையானவை
  • நெய் - தேவையானவை     
  • கேசரி பவுடர் - தேவையானவை     
செய்முறை 
  1. முதலில் ரவையை லேசாக வறுத்து கொள்ளவும்,
  2. முந்திரியை நெய்யில் வறுத்து கொள்ளவும் 
  3. கேசரி பௌடரை தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும் 
  4. பிறகு அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் மற்றும் கரைத்து வைத்துள்ள கேசரி பௌடரை சேர்த்து  கொதிக்க வைக்கவும் தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ரவையை சிறிது சிறிதாக கொட்டி ரவா கட்டிகள் ஏற்படாமல் கிளறவும் 
  5. சிறிது நேரம் கழித்து ரவை வெந்தவுடன் சீனியை சேர்த்து கிளறவும் 
  6. சீனி கரைந்து ரவாவுடன் நன்கு சேரும் வரை கிளறிவிட்டு வேகவிடவும். 
  7. பிறகு முந்திரியை சேர்த்து கிளறவும் 
  8. தேவைகேற்ப நெய் சேர்க்கலாம்.
 முந்திரி துண்டங்கள் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்:
  • தக்காளி  -  8     
  • பெரிய  வெங்காயம்  -  4
  • பச்சை   மிளகாய்  -  4  
  • வரமிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
  • அரிசி  -  2 கப்
  • பூண்டு - 5 பல்
  • இஞ்சி  - தேவைகேற்ப
  • பட்டை, கிராம்பு - தேவைகேற்ப
  • பிரிஞ்சி இலை - 1
  • எண்ணெய் - 2 ஸ்பூன்  
  • நெய்  - தேவைகேற்ப
  • கறிவேப்பில்லை, புதினா, கொத்தமல்லி தழை- 1 கை பிடி
  • உப்பு - தேவைகேற்ப
செய்முறை
  1.  சாதத்தை உதிரியாக வடித்துகொள்ள வேண்டும் 
  2.  கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு பட்டை கிராம்பு சேர்த்து   கறிவேப்பில்லை, புதினா, கொத்தமல்லி தழை, இஞ்சி, பூண்டு சேர்த்து   வதக்கவும் 
  3. பிறகு வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும் 
  4. பச்சைமிளகாய் மற்றும் வரமிககை தூள் சேர்த்து வதக்கவும்
  5. தேவையான  உப்பு சேர்க்கவும்
  6. நன்றாக எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
  7.  பிறகு இதில் தேவையான அளவு எடுத்து சாதத்தில் கலந்தால் தக்காளி சாதம் ரெடி.
  • தயிர் பச்சடியுடன் சாப்பிட  சுவையாக இருக்கும்.